<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1186348407924659813</id><updated>2011-07-28T15:22:49.486-07:00</updated><category term='இந்திய முஸ்லீம்களும்'/><category term='அன்பு சகோதரர்களே'/><title type='text'>குவைத்-இந்திய யூனியன் முஸ்லீம் லீக்</title><subtitle type='html'>தீவிரவாதம் அழித்து, சமநிலை சமுதாயம் படைப்போம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://iumlkuwait.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://iumlkuwait.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சின்ன ஷிப்லி</name><uri>http://www.blogger.com/profile/08978877230390426887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1186348407924659813.post-7818603179959988344</id><published>2009-09-30T02:13:00.000-07:00</published><updated>2009-09-30T02:13:51.013-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய முஸ்லீம்களும்'/><title type='text'>இந்திய முஸ்லீம்களும், பிரிவினை வீண்பழிகளும், “ஜஸ்வந்த்சிங் நூலும், வரலாற்று உண்மைகளும்”,  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தேசிய விவாதத்திற்கு தயாரா?</title><content type='html'>தாய்த்திரு இந்திய நாட்டின் சுதந்திர தின மணி விழாவை நாடெங்கிலுமுள்ள நூறு கோடி இந்திய மக்கள் உவகை பொங்க கோலாகலமாக கொண்டாடி வரும் மகிழ்ச்சியான வேளையில்-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க. மூத்தத் தலைவர் – முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமிகு.ஜஸ்வந்த்சிங் அவர்களால் எழுதப்பட்ட “ஜின்னா-இந்தியப் பிரிவினை-சுதந்திரம்” என்ற நூலை 17-08-2009 ந்தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு விழா நிறைவுகூட பெற்றிருக்காது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டு கூடாரங்களில் இந்நூல் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு தொண்டாற்றியதால் மூத்தத் தலைவராக மதிக்கப் பட்டு வந்த ஜஸ்வந்த்சிங் நொடிப்பொழுதில் கட்சிக்கு துரோகம் செய்தார்- கட்டுப்பாட்டை மீறினார்- கட்சியின் லட்சியத்தை சிதைத்துவிட்டார் என்று குற்றம் சுமத்துப்பட்டு, அவரை கட்சியிலிருந்து நீக்கியதற்கு, பா.ஜ.க கூறியிருக்கும் காரணம், “முகம்மது அலி ஜின்னாவை அளவுக்கு மீறி பாராட்டி தனது நூலில் ஜஸ்வந்த்சிங் எழுதிவிட்டார் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகம்மது அலி ஜின்னாவை தான் பெரிதும் மதிக்கிறேன் இந்திய சுத்ந்திரத்திற்காக போராடிஅ விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்டவர், முகம்மது அலி ஜின்னா போற்றுதலுக்குறிய இந்தியக் குடிமகன் என்று காந்திஜியால் புகழப்பட்டவர். இந்திய முஸ்லீம்களின் அரசியல் சாசன உரிமைகளை மீட்டுத்தரும் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்ட மதச்சார்பற்ற தலைவர் முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா மட்டும் காரணமில்லை, நேருஜியும்- சர்தார் வல்லபாய் படேலும்தான் முதல் முக்கியமானவர்கள். ஆனால் ஜின்னாவை மோசமானவர்- பிரிவினைவாதியாக இந்தியாவில் சித்தரித்து காட்டிவிட்டார்கள். ஜஸ்வந்த்சிங் தனது நூலில் ஜின்னா குறித்து எழுதியிருக்கும் கருத்துக்கள், அளவுக்கு மீறிய பாராட்டு என்றோ, புகழாறம் என்றோ யாரும் கூறிடமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு- தான் பிறந்த சொந்த ஊரை பார்ப்பதற்காக ஆர்வமாக சிந்து மாநிலத்திற்கு சென்றபோது முதலில் கராச்சியில் இருக்கும் “காயிதே ஆஜம்” முகம்மதலி ஜின்னா சமாதிக்கு சென்று நமஸ்காரம் செய்து, மலர்வளையம் சூட்டி மரியாதை செய்த பிறகுதான் சிந்து மாநில பயணம் மேற்கொண்டார். உலகறிய ஜின்னாவை பாராட்டிப் புகழ்ந்து பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“முகம்மதலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர், தான் கொண்ட லட்சியத்தில் வெற்றிவாகை சூடி, தனக்கென புகழ்வ வரலாற்றை உருவாக்கிக்கொண்ட மாபெரும் தலைவராவார்” என எல்.கே.அத்வானி பாராட்டியதை விட ஜஸ்வந்த்சிங் ஒன்றும் அதிகம் பாராட்டவில்லை. மாறாக ஜின்னா அரசியலில் எடுத்த தவறான முடிவுகளை கண்டித்தும் எழுதியிருப்பது நூலை முழுமையாக படிக்கும்போது புரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த அறுபதாண்டுகளில் பாகிஸ்தானின் பிரிவினைக் குறித்து வரலாற்றாசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கில் நூல்கள் எழுதியிருக்கிறார்கள்.பாகிஸ்தான் பிரிவினைக்கு நேருஜியும், வல்லபாய் படேலும், காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையும்தான் ஜின்னாவை பாகிஸ்தான் பிரிவினையின் பக்கம் தள்ளிவிட்டது என்று சாட்சி பகர்ந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தரக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் அரும்பாடுபட்டார். காந்திஜி, படேல், நேருஜி பாகிஸ்தான் பிரித்துதர கடைசிவரை பிடிவாதமாகவே இருந்தார்கள். இதை தெள்ளத்தெளிவாக “இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்ற தனது நூலில் மவுலானா அபுல்கலாம் ஆசாத் குறிப்பிடும் போது, காந்திஜி நாட்டின் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு காட்டி வந்தார். என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் பிரிக்க வேண்டும் என்று கூறிவந்த காந்திஜியை வல்லபாய் படேல் எப்படித்தான் நாடு பிரிக்க ஒப்புக்கொள்ளச்செய்தார். இது எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு காட்டிவந்த நேருஜியும் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார். நேருஜியை ஒப்புக்கொள்ளச் செய்ததில் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திற்க்கு பெரும்பங்கு இருந்ததாக விரிவாக குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு ஜஸ்வந்த்சிங் ஜின்னாவை பாராட்டியது குற்றமாக தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் சென்று வானளாவ ஜின்னாவை புகழ்ந்துவிட்டு வந்த அத்வானி ஏன்? குற்றமாக கருதவில்லை, ஜஸ்வந்த்சிங் மீது மட்டும் ஏன்? இந்த பாய்ச்சல், கட்சியிலிருந்து நீக்கம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நூலுக்கு தடை கோரிக்கை ஏன்?. இத்தனை கடும் எதிர்ப்புக்கு ஜஸ்வந்த்சிங் செய்த தவறு என்ன? முஸ்லீம்களுக்கு ஆதரவாக தனது நூலில் எழுதியிருப்பதுதான். ஜஸ்வந்த்சிங் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு செய்த பெருங்குற்றம். அதனால்தான் அவர் துரோகியாக மாறிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு சுதந்திரம் பெற்ற அகஸ்டு 15 ந்தேதியிலிருந்து இன்று நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் வரை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட தொடர் கலவரங்கள், முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பொத்தாம் பொதுவாக விமர்சித்து முஸ்லீம்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல் ஜஸ்வந்த்சிங் தனது நூலில் எழுதியிருந்தால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வின் எதிர்தாக்குதல் அவர்மீது இந்த அளவுக்கு இருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மை சகோதர இந்து மக்களிடையே முஸ்லீம்களுக்கெதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தும் விஷ ஆயுதம் பாகிஸ்தான் பிரிவினையைக் கருவாகவும், ஜின்னாவை மையமாகவும் வைத்து நூல் எழுதியதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு கடுங்கோபமும், ஆவேசமும் ஏற்பட்டுவிட்டது. ஜஸ்வந்த்சிங் துரோகியாக மாறிவிட்டார். இராவணனாக காட்சித்தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் பிரிவினையை முகம்மதலி ஜின்னா மீது திணித்தவர்கள் யார்? அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? என்று புதைக்கப்பட்டுவிட்ட உண்மைகளை தோண்டி எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டாலொழிய, இந்திய முஸ்லீம்களின் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுக்கான வழி பிறக்காது என்று ஜஸ்வந்த்சிங் எண்ணியிருக்கக்கூடும். அதனால்தான் பிரிவினைக்கு யார்.. யார்? காரணம் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு உண்மைகளை இந்திய மக்கள் முன் தனது நூலின் மூலமாக எடுத்து வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து குஜராத் கலவரம் வரை கடந்த அறுபதாண்டுகளில் லட்சக்கணக்கில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு வந்ததும், கோடானுகோடி உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையானதும், பாபர் மசூதி உள்பட நூற்றுக்கணக்கில் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டதும், இரண்டாம்தர குடிமக்களாக கடைகோடிக்குத் தள்ளப்பட்டதும், பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்றும் வீண்பழி சுமத்தி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க நடத்திவரும் நாசகார பாசிஸ்டுகளின் தூண்டுதல்தான் முக்கியக் காரணம் என்பதை-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் பிரிவினைக்காக இந்திய முஸ்லீம்கள் தங்களது வாழ்க்கையை இன்றுவரை விலையாக கொடுத்து வருகிறார்கள். என்று கோடிட்டு காட்டி, இந்திய முஸ்லீம்களை மாற்றுலக மனிதர்களாகக் கருதி நடத்தி வருகிறார்கள். என்பதையும் முஸ்லீம்களின் கல்வி, பொருளாதார நிலை படுபாதாளத்தில் தள்ளப்பட்டு, இரண்டாம்தர மூன்றாம்தர பிரஜைகளாக்கப்பட்ட அவலத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார் ஜஸ்வந்த்சிங். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்தும் – பெரும்பான்மை சகோதர சமுதாயத்திற்கு சரிநிகராக அளப்பரிய தியாகங்கள் செய்த வரலற்றை இருட்டடிப்பு செய்து சகோதர சமுதாய மக்களின் உள்ளங்களில் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும்- பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று பழித்துக்கூறும் கோஷங்களை எழுப்பி – முஸ்லீம்களை நம்பிக்கையற்றவர்களாக – தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வின் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இன்றுவரை தொய்வில்லாமல் தொடர்ந்தே வருகிறது. இதற்கு பக்கபலமாக விலைபோன ஒருசில செய்தி ஊடகங்களும் இயங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதாண்டுகளாக முஸ்லீம்களுக்கு எதிராக தொடரும் பழிச்சொற்கள், அபாண்டங்கள்-அநியாயங்கள்-சுமத்தப்பட்டு வரும் துரோக குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திவிட்ட வெதனைகளால்-வெந்தபுண்ணாக மாறிவிட்ட முஸ்லீம்களின் இதயக் காயங்களை படம்பிடித்துக்காட்டி “இந்திய முஸ்லீம்களின் கண்களை உற்றுப்பாருங்கள், இந்திய துரோகிகள் என்று சுமத்தப்பட்டு வரும் வீண் பழியின் வேதனைகளை நீங்கள் காண்பீர்கள்” என்று கோடானு கோடி இந்திய மக்களை சிந்திக்க வைத்து- நெஞ்சங்களை நெகிழச்செய்து, இந்தி- இந்துத்துவா ஆரிய இன பாசிஸ்டுகளை தோலுரித்துக்காட்டி இருக்கிறார். தனது நூலில் ஜஸ்வந்த்சிங் அவர்கள், அரசியலில் விழிப்புணர்வின்றி மாநிலத்திற்கு மாநிலம் ஒற்றுமையற்று சிதறிக் கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தைக் குட்டுவதுபோல் சிறப்புமிக்க இந்திய முஸ்லீம் சமுதாயம் பாகிஸ்தான் பிரிவினையால் இரண்டாக பிளவுபட்டது. அதன்பிறகு பங்களாதேஷ் பிரிவினையால் மூன்றாக பிளவுபட்டு சிதறியது.பாகிஸ்தான் பிரிவினை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்திய முஸ்லீம்கள் உள்பட அனைத்து இந்திய மக்களும், அனைத்து வளங்களும் பெற்று இருப்பார்கள். இன்று உலகத்திலேயே இந்திய நாடு வலிமைபெற்ற நாடாக உயர்ந்திருக்கும் என்று வேதனையை வெளிப்படுத்தி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையையும்- வளமான வாழ்வுக்கும்-வல்லரசு நாடு என்ற புகழுக்கும் முட்டுக்கட்டை ஏற்படுத்திவிட்டதை சுட்டிக்காட்டி ஒற்றுமையின் அவசியத்தை இந்திய முஸ்லீம்களுக்கு உணர்த்தி சிந்திக்க வைத்துள்ளார் ஜஸ்வந்த்சிங் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது” “விட்டு கொடுத்து வாழ்வது” என்ற உயரிய இந்திய பண்பாட்டு மரபுகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக “இந்திய மக்கள் தேசிய சக்தியாக” உயர்ந்து நிற்க முடியும் என்பதை-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மையில் நம்முடைய கடந்த காலம், கடந்த காலத்திற்குள் போகவில்லை. நம்முடைய கடந்த காலம் நமக்குமுன்னே தொடர்ந்து காட்சிதர வந்துபோகிறது. நம்முடைய கடந்த காலம் நம்முன் தவிப்போடு காட்சித்தருகிறது. இதன் மூலம் நாம் அனைவரும் படிப்பினை பெற வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்துக்கள், முஸ்லீம்கள், காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க – நாம் அனைவரும் உலகத்திலேயே பழமையான, உயர்ந்த பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.” என்று தொடக்க உரை எழுதி, பன்முக, இன மொழி, மதக் கலாச்சாரம் பேணும் இந்திய சமூகங்களிடையே ஒற்றுமைக்கான சிந்தனைப் புரட்சியை தொடங்கி வைத்திருக்கிறார். “ஜின்னா-இந்தியப் பிரிவினை, சுதந்திரம்” என்ற தனது நூலின் வாயிலாக திரு.ஜஸ்வந்த்சிங் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்னி ஆயுதமான ஜஸ்வந்த்சிங் நூல் எங்கே தங்களை சுட்டெரித்துவிடும் என்று கதிகலங்கிப்போன பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூடாரம் அவரை கேவலப்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியது. அதன் மூலம் அவரை தனிமைப் படுத்தி, அவர் வெளியிட்டக் கருத்துக்களை மூடி மறைத்துவிடலாம் என்று போட்டக் கணக்கு “கிண்று வெட்ட பூதம் கிளம்பியது போன்று ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம்,.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கே.அத்வானியின் அரசியல் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி,&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்கா,&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல பத்திரிகையாளர் அருண்ஷோரி,&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல பத்திரிகையாளர் டாக்டர்.வேத் பிரதாப் வேதிக்,&lt;br /&gt;&lt;br /&gt;என்று வரிசையாக பாசிஸ்டு கூடாரத்திலிருந்து ஜஸ்வந்த்சிங்க்கு ஆதரவான குரல்கள் ஒளிக்கத் தொடங்கிவிட்டது மட்டுமல்ல, நேற்றுவரை முகம்மதலி ஜின்னாவை பிரிவினைவாதி- இந்தியாவை கூறுபோட்ட விரோதி என்றெல்லாம் தூற்றினார்கள். இன்று விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர், இந்தியாவின் தேசியத்தலைவராக போற்றிப் புகழவும் ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடலெல்லாம் முஸ்லீம் எதிர்ப்புக் கொண்ட ஜனசங்கத் தலைவர் பால்ராஜ் மதோக் எழுதிய “தீனதயாள் உபாத்தியாயா முதல் இந்திராகாந்தி வரை” என்ற நூலையும், பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ். பழம்பெரும் தலைவர் எச்.வி.ஷேஷாத்ரி எழுதிய “டிராஜிடி ஆப் பாகிஸ்தான்” என்ற நூல்களில் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முக்கியக் காரணம்மல்ல என்பதையும், சர்தார் வல்லபாய் படேலும் முக்கியக் காரணம் என்ற தகவல்கள் சான்றாக எடுத்துக்காட்டி ஜஸ்வந்த்சிங்குக்கு பக்கபலம் சேர்த்து வருகிறார்கள். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஷெகவத்தும் அவருக்கு பேராதரவு தந்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல சிம்லாவில் கூடிய பா.ஜ.க தேசிய செயற்குழுவில் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், போன்ற பா.ஜ.க அரசுகள் நூலை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குஜராத் மாநில அரசு மட்டும்தான் நூலை தடை செய்தது. ஆனால் கர்நாடகா, ம.பிரதேசம் போன்ற அரசுகள் நூலுக்கு தடைவிதிக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டன. தற்போது நூலுக்கு குஜராத் அரசு விதித்த தடை செல்லாது என்று உச்ச நீதி மன்றமும் தீர்ப்பு சொல்லிவிட்டதால், நெருப்பை அள்ளி தன் தலையில் கொட்டிக்கொண்டதுபோல் தவித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்.”&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ---சின்ன ஷிப்லி----&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;தொடரும்...........!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1186348407924659813-7818603179959988344?l=iumlkuwait.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iumlkuwait.blogspot.com/feeds/7818603179959988344/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1186348407924659813&amp;postID=7818603179959988344' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/7818603179959988344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/7818603179959988344'/><link rel='alternate' type='text/html' href='http://iumlkuwait.blogspot.com/2009/09/blog-post_30.html' title='இந்திய முஸ்லீம்களும், பிரிவினை வீண்பழிகளும், “ஜஸ்வந்த்சிங் நூலும், வரலாற்று உண்மைகளும்”,  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தேசிய விவாதத்திற்கு தயாரா?'/><author><name>சின்ன ஷிப்லி</name><uri>http://www.blogger.com/profile/08978877230390426887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1186348407924659813.post-5553772100242477660</id><published>2009-09-19T08:58:00.000-07:00</published><updated>2009-09-19T08:58:15.563-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்பு சகோதரர்களே'/><title type='text'>அன்பு சகோதரர்களுக்கு ஒரு  வேண்டுகோள்</title><content type='html'>அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புனித ரமலான் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேளைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஸகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஸகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஸகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஸகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, &lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஸகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை மற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்கானாக்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்கான நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஸகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வஸ்ஸலாம்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: அ.சஜருதீன், சவுதி&lt;br /&gt;&lt;br /&gt;www.muduvaihidayath.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1186348407924659813-5553772100242477660?l=iumlkuwait.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iumlkuwait.blogspot.com/feeds/5553772100242477660/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1186348407924659813&amp;postID=5553772100242477660' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/5553772100242477660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/5553772100242477660'/><link rel='alternate' type='text/html' href='http://iumlkuwait.blogspot.com/2009/09/blog-post.html' title='அன்பு சகோதரர்களுக்கு ஒரு  வேண்டுகோள்'/><author><name>சின்ன ஷிப்லி</name><uri>http://www.blogger.com/profile/08978877230390426887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1186348407924659813.post-6800484251823936852</id><published>2009-08-29T17:56:00.000-07:00</published><updated>2009-08-29T17:57:34.614-07:00</updated><title type='text'>இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு</title><content type='html'>இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு&lt;br /&gt;இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ&amp;shy;த்து தந்தவர்கள் நினைக்கலாம்  ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.மாவீரன் திப்பு சுல்தான்:''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க லி அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்ற வரிகNள்hடு தான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?&lt;br /&gt;பேகம் ஹஜ்ரத் மஹல்:டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து  இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்வ குல்லா கான்:பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி&amp;shy;டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?&lt;br /&gt;வேலூர் சிப்பாய்க் கலகம்:சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?&lt;br /&gt;மாவீரன் கான் சாஹிப்:மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப்  தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால்  எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.&lt;br /&gt;மாப்பிளா மார்கள் போராட்டம்:&lt;br /&gt;1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்?&lt;br /&gt;அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்&amp;shy;ம் சமுதாயம்  காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு&lt;br /&gt;இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.&lt;br /&gt;வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு  வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி  1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்&amp;shy;ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:&lt;br /&gt;1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)3. அப்துல் ஹமீதுகான்  1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)4. முகமதலி  சேலம் (கள்ளுக்கடை மறியல்)5. பி.என். அப்துல் கபீர்  தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)6. பண்டிட் அப்துல் மஜீத்  பளைக்குளம் (கிலாபத்)7. கலிபுல்லாஹ்  திருச்சி (கிலாபத்)8. நூர்மல்  சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)9. அப்துல் ஹமீது 10. மௌலானா அப்துல் காதர்1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி&amp;shy;ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானாஇராஜகிரி அப்துல்லாஇளையான்குடி கரீம் கனிதிருப்பத்தூர் அபூபக்கர்திருப்பத்தூர் தாஜிதீன்அத்தியூத்து அபூபக்கர்பக்கரி பாளையம் அனுமன் கான்சென்னை அமீர் ஹம்சாசென்னை ஹமீதுசெங்குன்றம் கனிவண்ணாரப்பேட்டை ஹயாத்கான்புதுவலசை இபுராஹிம்பார்த்திபனூர் இபுராஹிம்வனரங்குடி இபுராஹிம்இளையான்குடி அப்துல் கபூர்மேலூர் அப்துல் ஹமீதுசோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்தத்தனனூர் அப்துல் காதர்பட்டுக்கோட்டை அப்துல் காதர்திருப்பூர் அப்துர் ரஜாக்காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்குருவம் பள்ளி அப்துல் மஜீத்கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபுலெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்ராம்நாடு அப்துல் வஹாப்மானாமதுரை அப்துல் பாசித்திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்அத்தியூத்து இபுராஹிம் ôசென்னை ஜாபர் ஹக்கிமிசிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்திருப்பத்தூர் காதர் பாட்ஷாபுதுவலசை முஹம்மது லால் கான்பார்த்திபனூர் கச்சி மைதீன்தஞ்சை முஹம்மது தாவூதுஅறந்தாங்கி முஹம்மதுசெரிபுதிருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்வடபழனி சென்னை முஹம்மது யூசுப்தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனிசிவகங்கை முஹம்மது இபுராஹிம்சென்னை முஹம்மது உமர்மதுரை மொய்தீன் பிச்சைஅம்மன்சத்திரம் முஹம்மது மீராசாதிருப்பத்தூர் பீர் முஹம்மதுகும்பகோணம் ரஹ்மத்துல்லாகுடியத்தம் நஜீமுல்லாஹ்கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபுஇராமநாதபுரம் சையது கனிபரகப்பேட்டை தாஜிதீன்மன்னர்குடி சிக்கந்தர்கம்பம் சிக்கந்தர்முதுகுளத்தூர் சுல்தான்கும்பகோணம் சுல்தான்இராமநாதபுரம் தாஜிதீன்&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு-யூசுப் கான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1186348407924659813-6800484251823936852?l=iumlkuwait.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iumlkuwait.blogspot.com/feeds/6800484251823936852/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1186348407924659813&amp;postID=6800484251823936852' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/6800484251823936852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1186348407924659813/posts/default/6800484251823936852'/><link rel='alternate' type='text/html' href='http://iumlkuwait.blogspot.com/2009/08/blog-post.html' title='இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு'/><author><name>சின்ன ஷிப்லி</name><uri>http://www.blogger.com/profile/08978877230390426887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
